சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

532 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

‘நின்னை ஈங்குப் பெற்றேன் என் எனக்கு அரியது’ என்று முன்நின்ற தம்பியை
நோக்கிக் கூறவேண்டும் இடத்து நின்னை என்னும் முன்னிலைக்கண் ‘எம்பியை’ என்ற
படர்க்கைச் சொல் பெய்தது முன்னிலைப் படர்க்கை மயக்கம் ஆகிய வழுவமைதியாம்.

‘யான் அங்ஙனம் சொல்லப்படுவேனோ’ என்று கூறு வேண்டிய இடத்து
‘அங்ஙனம்..........தந்தை, அங்ஙனம்.................தாய்’ என்று கூறுவன தம்மைப் பிறர்போல்
கூறும் குறிப்பாகும். முன்னிலையையும் படர்க்கையையும் எண்ணிப் படர்க்கை வினை
கொடுத்தலும், தன்மையையும் படர்க்கையையும் எண்ணிப் படர்க்கை வினை
கொடுத்தலும், தன்மையையும் முன்னிலையையும் எண்ணிப் படர்க்கை வினை
கொடுத்தலும், மூவிடங்களையும் எண்ணிப் படர்க்கை வினை கொடுத்தலும் போல்வனவும்
வழுவமைதியாம். இவையாவும் மயிலைநாதர் தந்த எடுத்துக்காட்டுகளாம். நன்.மயிலை.379
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி
பன்மைக்கு ஆகும் இடனுமார் உண்டே.’


‘முன்னிலை சுட்டிய ஒருமைக்கிளவி
பன்மையொடு முடியினும் வரைநிலை இன்றே
ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும்.’

‘தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பின்
தன்னிடத்து இயலும் என்மனார் புலவர்.’

‘எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நெறித்தா கும்மே.’

தொல்.சொல்.461, மு.வீ.ஒ.125



தொல்.சொல்.462


தொல்.சொல்.448


தொல்.சொல். 86