சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

594 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

வதாகக் கூறுகிறாள் என்பதும், மகன் மாட்டுள்ள அன்பினால் தலைவிக்கு அவன்
விளையாட்டிக்காக அணிந்த எருக்கமாலையும் மணம் வீசுகிறது என்பதும் இக்கூற்று
நிகழ்த்தும் இடத்துத் தலைவியின் உள்ளநிலை நோக்கி உணரப்படும்.

நேயம் என்பது விளக்கிக் கூறாமையாம்.


ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்
ஒருபொருள் வேறுபாடு உணருங் காலை
விளங்கா தாயின் விளங்க விளம்புப.’
தொல்.சொல்.55

மு.வீ.ஒ.87


இனம் செப்புதல்
 

322. எடுத்த மொழிஇனம் செப்பலும் உரித்தே.
 

இதுவும் ஒரு மரபு வழுக்காக்கின்றது; ஒரு தொடர் ஒரு பொருள் உணர்த்தி
அமையாது வேறு ஒரு பொருளும் குறித்து நிற்றல் வழு ஆயினும், அமைக்க என்றலின்.

இ-ள்: இனமாகிய பல பொருட்கண் ஒன்றனை வாங்கிக் கூறிய வழி, அச்சொல் தன்
பொருட்கு இனமாகிய பிற பொருளைக் குறிப்பான் உணர்த்தலும், உம்மையான்
உணர்த்தாமையும் உரித்து என்றவாறு.

வரலாறு: அறஞ் செய்தான் துறக்கம் புகும்- இழிவு அறிந்து உண்பான் இன்பம்
எய்தும்- எனவரும். இவை சொல்லுவார்க்கு இனப் பொருள் இயல்பு உரைக்கும் குறிப்பு
உள்வழி, மறம் செய்தான் துறக்கம் புகான்- கழிபேர் இரையான் இன்பம் எய்தான்- என
இனம் செப்புதலும், அக்குறிப்பு இல்வழி இனம் செப்பாமையும் காண்க.

எடுத்த பொருளை உணர்த்தும் மொழியை ‘எடுத்த மொழி’ என்றும்,
இனன்அல்பொருளின் நீக்குதற்கு ‘இனம்’ என்றும் கூறினார்.