சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

714 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

சிறப்பு வகையான் ‘வேற்றுமை’ என்ற பெயரால் வேற்றுமை உருபு கூறப்படுதல்
விளக்கப்பட்டுள்ளது. உரை சேனாவரையர் உரையே.
 

ஒத்த நூற்பா
 

 

முழுதும்      தொல்.சொல்.455, மு.வீ.ஒ.120
 

 

உரிச்சொற்கும் விசேடித்த லுண்மை
 

  360 உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய.

 


 

  இஃது உரிச்சொல்பற்றி நிகழ்வதோர் ஒழிபு கூறுகின்றது.

இ-ள்: உரிச்சொல் இடத்தும் வேறுபடுத்தும் சொல்லாதற்கும் உரியன உரியவாம்;
எல்லாம் உரிய வாகா என்றவாறு.

எனவே, உரிச்சொல்லுள் வேறுபடுத்தும் வேறுபடுக்கப்பட்டும் இரு நிலைமையும்
உடையவாய் வருவன பெரும்பான்மை என்பதாம்.

வேறுபடுப்பன: உறு- தவ-நனி- ஏ- என்னும் தொடக்கத்தன.

இரு நிலைமையும் உடையன: குரு- கெழு- செல்லல்- இன்னல்- என்னும்
தொடக்கத்தன.

உறுபொருள்- தவப்பல- நனிசேய்த்து- ஏகல்அடுக்கம்- என இவை ஒன்றனை
விசேடித்து அல்லது வாராமையும், குருமணி, விளங்குகுரு- கேழ்கிளர் அகலம்,
செங்கேழ்- செல்லல் நோய், அருஞ்செல்லல்- இன்னற்குறிப்பு, பேரின்னல்- என இவை
ஒன்றனை விசேடித்தும் ஒன்றனான் விசேடிக்கப்பட்டும் இருநிலைமையும் உடையவாய்
வருமாறும் வழக்கும் செய்யுளும் நோக்கிக் கண்டு கொள்க.

குரு விளங்கிற்று- செல்லல் தீர- எனத்தாமே நின்று வினை கொள்வன
விசேடிக்கப்படும் தன்மை உடைய ஆகலின்