சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-73,74729

‘தாழ்ந்த உணர்வினராய்’ என்ற பாடலை இறுதியடியை முதலாவதாகக் கொண்டு பொருள்செய்து இப்பொருள்கோள் அமையுமாறு காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்
 


 

முழுதும்
‘அளைமறி பாப்பே அந்தம் மொழிமற்று
உளவிடத்து உய்த்துத்தன் உரைப்பொருள் கொளலே.’

‘இயற்பா இறுமொழி இடையினும் முதலினும்
கூட்டிப் பொருளைக் கொள்ளுவது அளைமறி
பாப்பாம் எனப்பெயர் பகரப் படுமே.’
நன்.417


தொ.வி.311



மு.வீ.செய்யுளணி.26
 

கொண்டுகூட்டுப் பொருள்கோள்
 

368 யாப்படி பலவினும் கோப்புடை மொழிகளை
ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே.
 


 

இது நிறுத்த முறையானே கொண்டுகூட்டுப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது.

இ-ள் செய்யுளில் பல அடிகளுள்ளும் கோவைப்பட நின்ற சொற்களைப் பொருள்
தருதற்குப் பொருந்தும்படி முன் நின்ற சொல்லைப் பின்னே கொண்டு வந்தும் பின்
நின்ற சொல்லை முன்னே கொண்டு போந்தும் கொளுவிப் பொருள் கொள்வது
கொண்டுகூட்டுப் பொருள்கோளாம் என்றவாறு.

எ-டு:
                    ‘ஆலத்து மேலே குவளை குளத்துள
                    வாலின் நெடிய குரங்கு’
என்புழியும்,