வரும் து ஈற்றுச்சொற்களும், ஒன்று என எண்ணப்படும் பொருள்மேல் நிற்கும் ஒன்று என்னும் சொல்லும், அவை போல்வன பிறவும் அஃறிணை ஒருமைப்பெயர்களாம் என்றவாறு. வரலாறு: எது- ஏது- யாது எனவும், அது-இது- உது எனவும், அஃது- இஃது- உஃது எனவும், குழையது புறத்தது- மூலத்தது- கோட்டது- கரியது- ஊணது எனவும், ஒன்று எனவும் வரும் ‘இன்னன’ என்றதனானே, பிறிது- மற்றையது- உள்ளது- இல்லது என்றாற்போல்வன பிறவும் கொள்க. 22 |