பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-68261

முதல் வேற்றுமை-காரணக்கருத்தா, தான் தெரிகருத்தா, தான் தெரியாக்கருத்தா,
கருமக்கருத்தா, தலைமைக்கருத்தா என ஐவகைப்படுங் கருத்தாக்காரகத்தை உடையது.

இரண்டாம்வேற்றுமை-பற்றுக்கருமம், வீட்டுக்கருமம், இருபுறக்கருமம், தான்
தெரிகருமம், தான் தெரியாக்கருமம், கருத்தாக்கருமம், தீபகக்கருமம் என எழு
வகைப்படும் கருமக்காரகத்தை உடையது.

மூன்றாம்வேற்றுமை- புறக்கரணம், அகக்கரணம்- என்று இருவகைப்படும்
கரணக்காரகத்தை உடையது.

நான்காம் வேற்றுமை- ஆர்வக்கோளி, இரப்புக்கோளி, கிடப்புக்கோளி என
மூவகைப்படும் கோளிக்காரகத்தை உடையது.

ஐந்தாம் வேற்றுமை- அசலம், சலம் என்ற இருவகை அவதிக்காரகத்தை
உடையது.

ஏழாம்வேற்றுமை- சேர்வுஆதாரம், கலப்பு ஆதாரம், புலன்ஆதாரம்,
அயல்ஆதாரம் என நால்வகைப்படும் ஆதாரகாரகத்தை உடையது.
 

  காரகங்கள் ஆறனுக்கும் எடுத்துக்காட்டான
‘வரைநின் றிழிந்தங்கோர் வேதியன் வரவியின் கண்மலர்ந்த
விரைநின்ற பூவைக் கரத்தால் பறித்து விமலனுக்குத்
துரைநின்ற தீவினை நீங்கஇட் டான்என்று சொல்லுதலும்
உரைநின்ற காரகம் ஆறும் பிறக்கும் ஒளியிழையே’

வீ.சோ.39

என்ற காரிகையையும்,
 
    இருபத்து மூன்று காரகங்களையும் விளக்கும்
‘காரணம் தான்தெரி தான்தெரி யாக்கரு மம்தலைமை
ஆரணங் கேஐந் துளகருத் தா; அச லம்சலமாம்
பூரண மாகும் அவதி; புறம்அக மாம்கரணம்;
சீர்அணங்கு ஆர்வம் கிடப்புஇரப் பாம்கோளி; தேமொழியே’

40