பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-1265

வினையாலணையும் பெயரை நீக்குதற்கு வேற்றுமை கொள்ளாது எனவும்,
இடைச்சொல் உரிச்சொல் என்பனவற்றை நீக்குதற்குக் காலமொடு தோன்றும் எனவும்
கூறினார்.

வினைமுதல் நிலைகளாகிய காரகங்கள் எட்டனுள் ஏனைய காரகங்கள்
தேவைப்பட்டபோது வந்து இயையும்; அவ்வாறன்றிக் காலம் என்ற காரகம்
வினைச்சொல்உடன் தோன்றும். காலம் வெளிப்படையாக உணர்த்தாத வினைச்
சொல்லும் குறிப்பாகவாவது காலத்தை உணர்த்தும் என்பதை விளக்க ‘நினையுங்காலை’
என்றார்.

விளக்கம் பெரும்பான்மையும் தொல்.சொல். 198ஆம் நூற்பாவிற்குச் சேனாவரையர்
வரைந்த உரையை ஒட்டியதே.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்.’

தொல்.சொல். 198

 
  ‘குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்.’

201

 
  ‘இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமும் குறிப்பொடு கொள்ளும்
மெய்ந்நிலை உடைய தோன்ற லாறே.

200

 
  ‘இறப்பு நிகழ்வெதிர் வாம் காலங்கள் ஏற்றும்
குறிப்பும் உறுபேற்றல் கூடாத்- திறத்தவுமாய்
முற்றெச்சம் என்றிரண்டாய் மூவகைத்தாய் மூன்றிடத்தும்
நிற்கும் வினைச் சொற்கள் நேர்ந்து.

நே.சொல். 39

 
  ‘தனிவினை தொடர்வினை எனஇரு வினையினும்
நடவா முதலிய முதனிலைத் தனிவினை
விகுதி முதலானவை கூடின் தொடர்வினை.’

இ.கொ. 65