என்ற நூற்பாவான், நன்றே நன்றே- அன்றே அன்றே அந்தோ- அன்னோ- என்பன கொள்ளப்பட்டன.
அவனன்றே என்ற தெளிவுப்பொருளும், அதோஅதோ, அச்சோ அச்சோ, ஒக்கும் ஒக்கும் என்பனவும் அந்நூற்பாவுரையுள் சேனாவரையரான் கொள்ளப்பட்டன. அன்னா- இரக்கக் குறிப்புணர்த்துதல் நச்சினார்க்கினியரால் கொள்ளப்பட்டது. (284) அஆ- என்பது இரக்கக் குறிப்புணர்த்தலும் அவர் கூறியதே (284). அக்கொற்றன்- அவன்- என்பனவற்றில் அகரமும் ஆங்கு- ஈங்கு- என்பனபற்றில் ஆகாரமும், ஈகாரமும், யாவன்- எப்பொருள்- உண்கா- எவன்- என்பனவற்றில் பா-என்பதும் எகரமும் ஆகாரமும் இடைச்சொற்களாய்ச் சுட்டுப்பொருளும் வினாப் பொருளும் உணர்த்தின. |