பக்கம் எண் :

468 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

உரிச்சொல் பொருளுணர்த்துமாறு
 

287 மெய்பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம்
முன்னும் பின்னும் வருபவை நாடி
ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல்
தத்தம் மரபின் தோன்றும்மன் பொருளே.

 

இஃது உரிச்சொல்மாட்டு நிகழ்வது ஓர் ஐயம் அகற்றுகின்றது.

இ-ள் இச்சொல் இப்பொருட்கு உரித்து என மேற் கூறப்பட்ட உரிச்சொல்
எல்லாவற்றையும் அவற்றின் முன்னும் பின்னும் வரும் மொழிகளை ஆராய்ந்து அம்
மொழிகளுள் தமக்குப்பொருந்தும் மொழியொடு கூட்டிப் பொருள் உணர்த்துக. அவ்வாறு
உணர்த்தவே, வரலாற்று முறைமையால் தத்தமக்கு உரிய பொருள் விளங்கித் தோன்றும்
என்றவாறு.

இஃது என்சொல்லியவாறோ எனின்,
 

  ‘உறுதவ நனிஎன வரூஉம் மூன்றும்
மிகுதி செய்யும் பொருள என்ப’
‘செல்லல் இன்னல் இன்னா மையே’
தொல்.சொல். 299
302

எனவும் ஓதியவழி, அவை பயின்ற சொல் அன்மையான் இவை மிகுதியும்
இன்னாமையும் உணர்த்தும் என்று ஆசிரியான் ஆணையால் கொள்வது அல்லது
வரலாற்று முறைமையால் பொருள் உணர்த்தப்படாவோ என்று ஐயுறுவார்க்கு ‘உறுகால்’
‘தவப்பல’ புறம்.235 ‘நனிசேய்த்து’எனவும்,
 
  ‘மணங்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்’ அகம்.22

எனவும் முன்னும் பின்னும் வரும் சொல் நாடி அவற்றுள் இச்சொல்லொடு
இவ்வுரிச்சொல் இயையும் என்று கடைப் பிடிக்கத் தாம் புணர்த்த சொற்கு ஏற்ற
பொருள் விளங்குதலின், உரிச்சொல்லும் வரலாற்று முறைமையால் பொருள் உணர்த்தும்