பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-12,13481

விளக்கம்
 

  உரை சேனாவரையர் உரையே-  தொல்.சொல்.391


ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்  தொல்.சொல்.391


ஆசிரியன் உணர்த்த வல்லின் திரிபின்மை
 

292. பொருட்குத் திரிபுஇல்லை உணர்த்த வல்லின்.
 

இ-ள்: உறுகால் என்புழி, உறு என்னும் சொற்குப் பொருளாகிய மிகுதி என்பதன்
பொருளும் அறியாத மடவோன் ஆயின் அவ்வாறு ஒருபொருட்கிளவி கொணர்ந்து
உணர்த்தல் உறாது, ‘கடுங்காலது வலிகண்டாய் உறு என்பதற்குப் பொருள்’ என்று
தொடர்மொழி கூறியானும் கடுங்கால் உள்வழிக் காட்டியானும் மாணாக்கன் உணரும்
வாயில் அறிந்து உணர்த்தல் வல்லவன் ஆயின் அப்பொருள் திரிபுபடாமல் அவன்
உணரும் என்றவாறு.

அவ்வாற்றானும் உணர்தல் ஆற்றாதானை உணர்த்துமாறு என்னை எனின்
அதற்கு அன்றே வருஞ்சூத்திரம் எழுந்தது என்பது. 13
 

விளக்கம்
 

சொல்லை ஒருசொற்றொடரில் பெய்து விளக்கலாம்; இன்றேல் சொல்லுக்குரிய பொருளை நேரில் காட்டி விளக்கலாம் என்பது. உரை சேனாவரையர் உரையே
- தொல்.சொல்.392


ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்  தொல்.சொல்.392