பக்கம் எண் :

பகுபத-உறுப்பிலக்கணம்39

இவற்றுள் இகரம் நீங்கலான னகரமும் உகரமும் கெட்டுப் புணர்ந்தன என்று கோடலே
ஏற்றதாம். ஆகவே, இறந்தகால இடை நிலைகளில் ‘இன்’ என்பதன் நிலை
குறித்துணரத்தக்கது.

‘புக்கான்’ என்ற சொல்லில் புகு- பகுதி; ஆன்- விகுதி; பகுதி இரட்டித்து
இறந்தகாலம் காட்டிற்று என்று கூறுதல் வேண்டும். இதனை, புகு+க்+ஆன்- என்று
பிரித்தால் ‘க்’ இறந்தகால இடைநிலை என்று இலக்கண விளக்கம் கூறும்.

இனி, நட்டாள், பெற்றான் என்றவற்றிலும் நடு, பெறு என்பன பகுதிகள்; ஆன்-
விகுதி: பகுதி இரட்டித்து இறந்த காலம் காட்டியது என்பாரும் உளர்.

தகரமும், றகரமும் இறந்தகால இடைநிலைகளாத லின், நடு+ட்+ஆன்,
பெறு+ற்+ஆன் என்று பிரித்து ட், ற், இரண்டும் இறந்தகால இடைநிலைகள் என்று
கோடலே ஏற்றது.

(க், ட், த், ற், இன் இ, ய, ன, ன், ய், அன் என்பனவும் இறந்தகால இடைநிலை என்று இலக்கணவிளக்கம் கூறும்)-6

நிகழ்கால இடைநிலைகள்:-

  கிறு, கின்று, ஆநின்று என்பன.
உண்+கிறு+ஆன்- உண்கிறான்.
உண்+கின்று+ஆன்- உண்கின்றான்.
உண்+ஆநின்று+ஆன்- உண்ணாநின்றான்.
 
கிட இரு என்பனவும் நிகழ்காலஇடைநிலை. (இ.வி.வி.6)

செய்யும் என்னும் வாய்பாட்டிலுள்ள உம்மீறு விகுதிதான் நிகழ்காலமும்
எதிர்காலமும் காட்டும்.

எதிர்கால இடைநிலைகள்:-

  ப், வ், க் என்பன.
உண்+ப்+ஆன்; பாடுவான்- பாடு+வ்+ஆன்;
செய்கேன்- செய்+க்+ஏன்.