1 நாற்றம் முதலியவற்றான் தோழி ஐயுற்று ஆராய்தல்.
2 ஆராய்ந்து கண்ட முடிவான் ஐயம் தெளிதல்.
3 மெய்யானும் பொய்யானும் தலைவியொடு குறிப்பால் உரையாடல்.
4 தலைவன் ஊர் பெயர் முதலிய வினாயவழி, "இவன் யாவன்? இவன்
உள்ளக்கருத்து யாது?" என்று ஆராய்தல்.
5 ஆராய்ச்சியால் தலைவன் எண்ணத்தை அறிதல்.
6 தோழியும் தலைவியும் இருந்த இடத்துத் தலைவன் வந்து
உரையாடியவழி அவனுக்கு மறுமொழி கொடுத்தல்.
7 தலைவனை எள்ளி நகையாடுதல்.
8 தலைவன் தலைவியர் உள்ளக்கருத்தைத் தோழி முடிவாக உணர்தல்.]