354                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     இரவு வலியுறுத்தல்:

 "குவளைக் கருங்கண் கொடிஏர் இடைஇக் கொடிகடைக்கண்
  உவளைத் தனதுஉயிர் என்றது தன்னோடு உவமையில்லா
  தவளைத்தன் பால்வைத்த சிற்றம் பலத்தான் அருளிலர்போல்
  துவளத் தலைவந்த இன்னல்இன் னேஇனிச் சொல்லுவனே."

திருக்கோவை. 51

 எனவும்,

     [ஒப்பற்ற பார்வதியைத் தன் இடப்பாகமாகக் கொண்ட சிவபெருமானின்
 அருள் இல்லாதவரைப் போல, என்மனம் வாடுமாறு வந்துள்ள துன்பத்தை,
 தலைவியின் கடைக்கண்களால் தன் உயிர்போல்வாள் என்று
 அறிவிக்கப்பட்ட தோழியிடம் யான் போய்ச் சொல்லுவேன்.]

     ஊர் வினாதல்:

 "ஒருங்குஅட மூஎயில் ஒற்றைக் கணைகொள்சிற் றம்பலவன்
  கருங்கடம் மூன்றுஉகு நால்வாய்க் கரிஉரித் தோன்கயிலை
  இருங்கடம்மூடும்பொழில் எழில் கொம்பர் அன்னீர்கள் இன்னே
  வருங்கள்தம் மூர்பகர்ந் தால்பழி யோஇங்கு வாழ்பவர்க்கே".

திருக்கோவை. 55

 எனவும்,

     [திரிபுரத்தை அழித்து, யானையைக் கொன்று தோலை உரித்த
 சிவபெருமானின் கயிலைச் சோலையில் உள்ள கொடி போல்வீர்!
 இப்பொழுதே வாருங்கள், இவ்வூரில் வாழ்வார் தம் ஊர்ப் பெயரைக்
 கூறுதல் பழியாகுமோ?]

     பெயர் வினாதல்:

    "தார்என்ற ஓங்கும் சடைமுடி மேல்தனித் திங்கள்வைத்த
     கார்என்ன ஆரும் கறைமிடற்று அம்பல வன்கயிலை
     ஊர்என்ன என்னவும் வாய்திற வீர்ஒழி யீர்பழியேல்
     பேர்என்ன வோஉரை யீர்விரை ஈர்ங்குழல் பேதையரே".

திருக்கோவை. 56

 எனவும் வரும்.