552இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

செவிலி அறத்தொடுநிற்றல்:


   ‘மெல்லியல் வேற்றமை கண்டுதாய் வினாவுழித்
   தொல்இயல்பு உணர்ந்த தொன்மைசால் செவிலி
   முன்னிலை மொழியான் மொழிதற்கும் உரியள்,’

மா, அ. 75


நற்றாய் அறத்தொடுநிற்றல்:

   ‘நற்றமர்க்கு அவ்வுழி நற்றாய் அறத்தொடு
   நிற்றலும் உளதுஎன நிகழ்த்தினர் புலவர்.’

மா, அ. 76

   ‘இன்னணம் இயம்பிய எல்லாம் களவியல்
   மன்னி வெளிப்படா அளவைத்து ஆகலின்
   அறத்தொடு நிற்றல் அதன்வகை விரியே.’

மா, அ. 77]


அநுவாத முகத்தான் கையறுதோழி கண்ணீர் துடைத்தலும் வரப்பெறும். அதற்குச் செய்யுள்:

வாரண மாவின் மருப்பும் பொருப்பும் மலைந்தகொங்கை
பூரணம் ஆகும் பொலங்கொடி யேபொற்பு நீஅழியும்
காரண மாஒன்று கண்டில மால்கண் கலுழ்வதுஎன்னோ
தோரண மாமறு கில்பலர் கண்டுஅலர் தூற்றுதற்கே.


அம்பி. 337


எனவும்,

      [யானையின் மருப்பையும் மலையையும் வென்ற நகில்கள் வனப்பு நிரம்பப்பெற்ற பூங்கொடியே! உன்வனப்பு அழிதற்கு ஒருகாரணமும் எமக்குப் புலப்பட்டிலது. தோரணம் கட்டப்பட்ட பெரிய தெருக்களில் உள்ளார் பலரும் உன்னைப் பழி தூற்றுமாறு நீ கண்ணீர்உகுப்பதன் காரணம் யாது?]
 


தலைமகள் கலுழ்தற் காரணம் கூறல்:


பண்டு நமக்குப் பரிந்துமை ஊட்டிய பங்கயக்கை
ஒண்தொடி சோர உயங்குதல் நோக்கித் தயங்குமுது