அகத்திணையியல்--நூற்பா எண் 161,162561

     நற்றாய் குறிப்பின் அன்றி அறத்தொடுநிற்கப் பெறாள் என்றமையால், அதற்கு உதாரணம் இன்று.

161


     [தலை தாழ்த்தித் தேவர்கள் வணங்கித் துதிக்கும்
சிற்றம்பலத்தானுடைய அருவிகள் பரவிப் பாயும் கயிலைமலையிலே
பயிலுகின்ற செல்வியாகிய நம் தலைவியை, இளைய இவ்வயதில் இவள்
செய்துள்ள செயல்நோக்கி எவ்வாறு புகழ்ந்து வாழ்த்துவேன்! இரண்டு
பற்கள் புதியனவாக விழுந்து முளைப்பதன் முன்னமேயே பேரறிவு
படைத்துவிட்டாளே!]

161


களவு வெளிப்பாட்டின் கிளவித்தொகை


534 போக்கே1 கற்பொடு புணர்ந்த கவ்வை2
    மீட்சி3 என்று ஆங்கு விளம்பிய மூன்றும்
    வெளிப்படைக் கிளவி வெளிப்படு தொகையே.


    இது களவு வெளிப்பாட்டிற்கு உரிய கிளவித்தொகை இத்துணைத்து

என்கின்றது.

    (இ-ள்) போக்கு முதலாக மீட்சி ஈறாகச் சொல்லப்பட்ட மூன்றும் களவு
வெளிப்பாட்டிற்கு உரிய கிளவித்தொகை என்றவாறு.

162
 

விளக்கம்
 

1 தமரைப் பிரிந்து தலைவி தலைவனுடன் செல்லுதல்.


2 தலைவி தலைவனுடன் சென்றதைப் பலரும் அறிதல்.


3 தலைவி தலைவனுடன் மீண்டு வருதல்.

இம் மூன்று கிளவித்தொகைக்கும் வகையும் விரியும் இனி வரும்

நூற்பாக்களில் கூறப்பெறும்.

71