அகத்திணையியல்--நூற்பா எண் 164571

      [ஐய! உன்னோடு செல்லும்போது, தலைவிக்கு மான்கள் நீர்
வேட்கையுற்றுக் கானல்நீரைக் குடிக்கும்தண்ணீர் என்று கருதிச் செல்லும்
காடுகள் நிறைந்த வழியும், தனக்கு ஒப்பும் எல்லையும் இல்லாத
சிவபெருமான் தங்கும் தில்லையிலுள்ள பூக்கள் நிறைந்த குளமும்

வயலும்போலும்!]


தலைவன் போக்கு உடன்படுதல்:


இன்னாத கானும் இனிதுஎன்று நீர்இங்கு இயைந்த அன்பும்
அந்நாள் அளித்த அணங்கும்உண் டேஎனது ஆவிஅன்னார்
மின்னார் திருந்துஇழை மெய்வருந் தாவகை மெல்லமெல்லப்
பன்னாள் படவும் உடன்கொண்டு சேறும் பணிமொழியே.

அம்பி. 365


எனவும
,

      [பணிமொழித் தோழியே! இன்னாதபாலையும் என்னுடன்வரின்
தலைவிக்கு இனிதாக இருக்கும் என்று நீ கூறிய அன்பு மொழிகளும், பண்டு
தலைவியை எனக்குத் தந்ததெய்வத்தின் திருவருளும் தவறாது உண்டு
ஆதலின்,என்உயிர்போன்ற தலைவியின் உடல் வருந்தாதவகையில் மெல்லப்
பலநாள்கள் நடத்தியாவது உடன்கொண்டு சென்றுவிடுகிறேன்.]
 

பாங்கி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல்:
 

குறப்பாவை நின்குழல்வேங்கைஅம் போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதுஓர் தீவினை வந்துஉறில் சென்றுசென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னும்துன் னத்தகும் பெற்றியரே.

திரு. 205

எனவும்,

      [குறவர் குலப்பாவையே! சிவபெருமானுடைய புலியூரை மறக்கும்
படியானது ஒரு தீவினை ஏற்படுமாயின் பல பிறப்புக்கள் எடுக்க நேரிடினும்,
மீண்டும் நினக்கே கணவ