னாக வந்து உன்னோடு கூடுதற்கு உரிய தலைவன் உன் கூந்தலில்
கோங்கம்
பூவினை வேங்கைப்
பூவுடன் கலந்து பாதிரிப் பூவையும்
இணைத்துச்
சூட்டுதலை விரும்புகிறான்.
பாலைநிலத்துக் கோங்கம் பூவைக் கூறி உடன் போக்கினைக் குறிப்பால்
உணர்த்தியவாறு.]
தலைவி நாண் அழிபு இரங்கல்:
மறவாகை வேல்அங்கை வாணனை மாறையர் மன்னனைத்தம்
உறவாக எண்ணி உறாதவர் போல்உயிர் ஓம்பிஎன்றும்
துறவாத நாணம் துறப்பது வேண்டலின் தொல்உலகில்
பிறவாது ஒழிகைநன் றேஒரு காலமும் பெண்பிறப்பே.
தஞ்சை. 310
எனவும்,
[வேல் ஏந்திய வாணனாகிய மாறையர்மன்னனை உறவாகக் கருதி
நட்புக்கொள்ளாத பகைவர் போல,
பாதுகாத்து இன்றுவரை யான் துறவாத
நாணத்தைத் துறக்கும் நிலை இன்று எனக்கு ஏற்பட்டதனை நோக்கின்,
இவ்வுலகில் பெண்ணாகப் பிறவாதிருத்தலே சிறந்தது என்று தோன்றுகிறது.]
கற்பு மேம்பாடு பூண்முலைப்பாங்கி புகறல்:
தாயில்சிறந்ததன்று நாண்தையலாருக்கு அந்நாண்தகைசால்
வேயில் சிறந்தமென் தோளிதிண் கற்பின் விழுமிதன்றுஈங்
கோயில் சிறந்துசிற் றம்பலத்து ஆடும்எம் கூத்தப்பிரான்
வாயில் சிறந்த மதியில் சிறந்த மதிநுதலே.
திரு. 204
எனவும்,
[மதிநுதலே! ஈங்கோய்மலையில் சிறந்து காட்சி வழங்கிச்
சிற்றம்பலத்தில்
கூத்தாடும்
சிவபெருமானுடைய வாயில் சிறந்த
நூல்களிடத்துச் சிறப்புடைய
பொருளாகச் சொல்லப்படுவனவற்றுள்,
நாணம்
மகளிருக்குத் தாயினும்
சிறந்தது; அந்நாணம்தானும் கற்பினும் மேம்பட்டது
அன்று.]
|