[நல்லாய்! வேற்படைவாணனை வணங்காத பகைவர் சென்று சேரும்
இடமான
அழல்பொங்கும் கொடிய
பாலையில் அரம் போன்ற கூரிய
கற்களை உன்
அடிகளாகிய மலர்கள் தாங்கும் ஆற்றல் உடைய அல்ல
ஆதலின்,
பாலையின் வெப்பம் நீங்குங்காறும் இச்சோலையில் தங்கி
இளைப்பாறுவாயாக.]
தலைமகன் தலைமகளை உவந்து அலர்சூட்டி
உள்மகிழ்ந்து உரைத்தல்:
அடிமலர்போற்றவும்போற்றிசெய்யாஇவள் ஆய்முடிக்குயான்
கடிமலர் சூட்டவும் காட்டிய தால்கள்வர் காய்ந்துஎறியும்
துடிமலர் சீர்க்குஎதிர் கூகை இரட்டும் சுரத்திடைஓர்
வடிமலர் வேல்படை யான்வாணன் மாறைஎன் மாதவமே.
தஞ்சை. 318
எனவும்,
[வேற்படை வாணன் மாறையில் யான்செய்த தவம்,
ஆறலைகள்வர்கள்
செருக்கோடு ஒலிக்கும் துடிப்பறையின்
ஒலிக்கு எதிராகக்
கோட்டான்
குழறும்
பாலை நிலத்தில், தலைவியின் அடிகளாகிய மலர்களை
யான்
போற்றுமாறும்,
அவளைப் புனைந்துகூறி அவள் கூந்தலுக்கு
நறுமணமலர்களைச் சூட்டுமாறும்
வாய்ப்பு அளித்தது.]
கண்டோர் அயிர்த்தல்:
கருஆர் புயல்என்றும் கண்டுஅறி யாதஇக் கான்அகத்தே
வருவார் சிலர்அவர் மற்றுஇவர் யாவர்கொல் வாரிதந்த
திருவாம் எனில்இவள் செங்கையில் பங்கயம் இல்லைசெல்வன்
மருஆர் துளவுஅணி மால்எனின் மார்பின் மறுஇல்லையே.
அம்பி. 377
எனவும் வரும்.
[கார்மேகத்தைக் கண்டறியாத இப்பாலையிலே பொதுவாக நன்மக்கள்
வாரார்; இவர் யாரோ? தெற்றென
உணர்தல் இயலவில்லை. இவளைத்
திருமகள்
என்று கொள்வோ
|