மன்னும் கடிமலர்க் கூந்தலைத்
தான்பெறு மாறும்உண்டேல்
உன்னுங்கள் தீதின்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே.
திரு. 236
எனவும்,
[நான்மறை அந்தணரே! உலகைத் துன்புறுத்தும் விடம் உண்ட
சிவபெருமான்
அருளால், எங்கள் வீட்டிலேயே எம் பெண்ணின் மணத்தை
யான் முடிக்கும்
வாய்ப்பினைப் பெறுதற்கு நல்வினை உண்டாயின்,
ஆராய்ந்து தீதுஇன்றிக்
கூறுங்கள்.]
மிக்கோர் ஏதுக்காட்டல்:
சுரும்புஇவர்சந்தும்தொடுகடல்முத்தும்வெண்சங்கும்எங்கும்
விரும்பினர்பால்சென்றுமெய்க்கணியாம்வியன்கங்கைஎன்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம் பலம்அனைய
கரும்புஅனமென்மொழியாரும் அந்நீர்மையர்காணுநர்க்கே.
திரு 248
எனவும்,
[சந்தனமும், முத்தும், சங்கும் தாம் பிறந்த இடத்தில் பயன்படாது
விரும்பினவர் இடத்துச் சென்று அவர் உடலுக்கு அழகு தரும். கங்கை
சூடிய
சிவபெருமானின் சிற்றம்பலம் அனைய வனப்புடைய கரும்பு அன்ன
சொல்லினிமை உடைய பெண்களும், ஆராய்ந்து பார்ப்பவருக்கு
அத்தன்மையராகவே கொள்ளத்தக்கார்.]
செவிலி எயிற்றியொடு புலம்பல்:
பேதைப் பருவம்பின் சென்றது முன்றில் எனைப்பிரிந்தால்
ஊதைக்கு அலமலரும் வல்லிஒப் பாள்முத்தன் தில்லைஅன்னாள்
எதில் சுரத்து அய லானொடுஇன்று ஏகினாள் கண்டனையே
போதில் பொலியும் தொழில்புலிப் பல்குரல் பொற்றொடியே.
திரு. 239
எனவும், |