616இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

மனைக்கேவரும்எனவந்துசொன்னார் தஞ்சைவாணன்வெற்பில்
சுனைக்கேழ் மலர்க்கழு நீர்க்குழ லாய்சில தூதர்முன்னே.

தஞ்சை. 357

எனவும்,

       [தஞ்சைவாணன் மலைச்சுனைக் கழுநீரைச் சூடிய குழலாய்!
‘உறவினர் புடைசூழ அவ்வூரில் திருமணம் செய்து கொண்டு தலைவியோடு
தொடர்பை உறுதிப்படுத்திக் கொண்ட தலைவன்பின்னே நம் பெண்ணாகிய
தலைவி இன்று நம் வீட்டிற்கு வருவாள்' என்று சில தூதர்கள் வந்து
முற்படத் தெரிவித்துள்ளனர்.]
 

உற்றுஆங்கு இருவரும் தலைவிஇல் வந்துழித் தலைவன்

பாங்கிக்கு யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு என்றல்:
 

ஓங்கும் பலவும் கதலியும் சூழும்எம் ஊர்வயின்போய்ப்
பாங்குஒன் றியசெழும் பாவகன் முன்னர்ப் பணிமொழியாய்
வாங்கும் சிலைநுதல் மடந்தைக்கு மங்கல நாண்புனைந்தது
ஈங்குஉன் பெருந்தமர் யாவர்க்கும் நீசென்று இயம்புகவே.

அம்பி. 416

எனவும்,

      [பணிமொழித் தோழியே! பலாவும் வாழையும் சூழ்ந்த எம் ஊருக்குப்
போய், என்றும் துணையாக உதவும் அக்கினிக்குமுன், வில்போன்ற

நெற்றியை உடைய தலைவிக்கு மங்கலநாண் புனைந்து யான் அவளை
மணந்து கொண்ட செய்தியை உன் உறவினர் யாவருக்கும் சென்று
தெரிவிப்பாயாக.]
 

தான் அது முன்னே சாற்றினன் என்றல்:
 

அன்னைக்கியம்பினன் ஆண் தகையான்முன் அறிந்துதென்னன்
தன்னைப் பணிந்துகுற் றேவல்செய் யாது சமர்எதிர்ந்த