தனித்துழி இறைவி துனித்து
அழுது இரங்கற்குச் செய்யுள்:
அப்புஉற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர்உறுநோய்
ஒப்புற்று எழில்நலம் ஊரன் கவர உள்ளும்புறம்பும்
வெப்புற்று வெய்துஉயிர்ப்பு உற்றுத்தம் மெல்அணை யேதுணையாச்
செப்புஉற்றகொங்கையர்யாவர்கொல்ஆர் உயிர்தேய்பவரே.
திரு. 354
எனவும் வரும்.
[கங்கையைச் சடையில் வைத்த சிவபெருமானுடைய தில்லையை
உறாதவர்
அடையும் நோய் போன்று, தலைவன் அழகைக்
கொள்ளைகொண்டு
பிரிந்ததனால் உள்ளும் புறமும் சூடுற்று
பெருமூச்சுசெறிந்து தம்
தலையணையே துணையாக உயிர்
தேய்த்துகொண்டிருக்கும் இளையார்கள்
என்போல் பிறர் உளரோ.]
ஒன்றென முடித்தலால், கனவில் கண்டு இரங்கலும், செஞ்சுடர்க்கு
உரைத்ததூஉம், வாரம் பகர்ந்ததூஉம்,
அடிசில் அமைத்த மடவரல்
இரங்கலும், தலைவன் பிரிந்தமைக்கு இரங்கலும், வரவும்பெறும்.
கனவில் கண்டு இரங்கல்:
தேவா சுரர்இறைஞ் சும்கழ
லோன்தில்லை சேரலர்போல்
ஆஆ கனவும் இழந்தேன் நனவுஎன்று அமளியின்மேல்
பூஆர் அகலம்வந்து ஊரன் தரப்புலப் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன்விழித் தேன்அரும் பாவியனே.
திரு. 355
எனவும்,
[பாவாய்! தேவரும் அசுரரும் வணங்கும் திருவடியை உடைய
சிவபெருமானின் தில்லையைச் சேராதவர்போல, ஐயோ! கனவினையும்
இழந்துவிட்டேன். படுக்கையிலே தலைவன் தன்மார்பினை யான்
தழுவுதற்குக்
கொடுக்கப் புலவி |