658இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

செவ்வணி அணிந்து சேடியை விடுத்தல்:


     அரத்தம் உடீஇ அணிபழுப்பப் பூசிச்
     சிரத்தையால் செங்கழுநீர் சூட்டிப் - பரத்தை
     நினைநோக்கிக் கூறினும் நீஒழியல் என்று
     மனைநோக்கி மானை விடும்.

திணைமாலை. 144


எனவும் வரும்.

     [செந்நிற ஆடை உடுத்தி, செஞ்சாந்து பூசி, பொறுப்போடு
செங்கழுநீ்ர்ப் பூவைச் சூட்டி, ‘பரத்தை உன்னை நோக்கி ஏதேனும் இகழ்ந்து
கூறினும் நீ தலைவனைக் காணாது வாராதே' என்று தலைவன் தங்கிஇருந்த
பரத்தைமனையை நோக்கிச் சேடி ஒருத்தியை அனுப்புவாள்.]

            அவ்வணி உழையர்கண்டு அழுங்கக் கூறல்:

வேளாண் மரபு விளக்கிய வாணன்மின் னார்கழல்சூழ்
தாளான் வளம்கெழு தஞ்சை அன் னீர்சங்கம் தந்தநன்னீர்த்
தோளா மணிஅன்ன தொல்குல ஓடையில் தோன்றியபூ
வாளா அலர்தொடுப் பார்க்குஎங் ஙனேவந்து வாய்த்ததுவே.

தஞ்சை. 382

எனவும்,

     [வேளாண் மரபினை விளக்கும் வாணன் என்ற பெயருடைய கழல்
சூழ்ந்த திருவடிகளை உடையவனுடைய வளம் பொருந்திய தஞ்சையை
ஒத்தவரே! சங்கிலிருந்து தோன்றிய துளையிடாத முத்துப்போன்ற மேதக்க
குலமாகிய ஓடையில் தோன்றிய பூ, வீணாக அலர் தொடுப்பவருக்கு
எவ்வாறு வந்து கிடைத்ததோ ?- தலைவியின் உயர் குடிப்பிறப்புக்
கூறியவாறு.]
 

பரத்தையர் கண்டு பழித்தல்:


தண்ணந் துறைவன் மனைஉறை பாவை தகுதிசொல்லின்
பண்ஒன் றியமொழி யீர்வசை யேபனி வார்குவளைக்