| 
       
      கைகளையும், பால் பரவியுள்ள 
      தனங்களையும் நெய்யாடிப் பசந்து ஒளி 
      
      வீசும் உடம்பையும் குணங்களையும் 
      முற்பிறப்பில் நற்றவம் புரிந்த நான் 
      
      என்று
      வந்து காண்பேன்?] 
      
       
      தலைவிக்கு அவன் வரல் பாங்கி சாற்றல்: 
      
       
      மருஆர் குழலி வருந்திய மெய்யும் மகவும்கையும் 
      பருவார் முனிந்த பயோதர பாரமும் பச்சுடம்பும் 
      ஒருவாத உள்ளத்து உவகையும் காணநம் ஊரர்நின்பொன் 
      திருவாசல் வந்துநின் றார்அறி யேன்நின் திருவுளமே. 
      
      அம்பி. 466 
      
      
      
      எனவும், 
      
       
           
      [நறுமணம் கமழும் கூந்தலை உடையாய்! உன் வருந்திய உடல், 
      
      கையில்
      ஏந்தியுள்ள குழந்தை, கச்சினைக்கடந்து பரந்த நகில்கள், 
      ஈன்றணிமை
      உடைய உடல், நீ்ங்காத மனமகிழ்ச்சி இவற்றைக் காண்பதற்கு 
      நம் தலைவன்
      உன் இல்லத்து வாசலில் வந்து நிற்கின்றான். உன் 
      உள்ளக்கருத்தையான்
      அறியேன்.] 
  
      
      தலைவி உணர்ந்து தலைவனொடு 
      புலத்தல்: 
  
      
      
      ஆம்பால்விரவினது அன்பால்அறிந்துஅயில்  
      
      அன்னம் அன்னீர் 
      போம்பால் அனையசொல் பூவையர் சேரியில் புல்லிஇங்ஙன் 
      யாம்பாலனைக் கொண்டு இனிவைகல் போக்கு தும்எம்முலையின் 
      தீம்பால் படில்அவர் செய்குறி மார்பில் சிதையும் அன்றே. 
      
      அம்பி. 471 
      
      
      
      எனவும், 
      
       
          
      [நீரோடு விரவிய பாலினைப் பகுத்து அறிந்துஉண்ணும் அன்னத்தை 
      ஒப்பீர்!
      வெளிப்படும் பால்போன்ற இன்சொல் பரத்தையர் சேரியில் 
      அவரைப் புல்லி
      இங்குவந்து எம்நகிலின் தீம்பால் படின், தலைவன் மார்பில் 
      பரத்தையர்
      செய்துள்ள குறிகள் சிதைந்துவிடும். ஆதலின் அவர்கள் புலத்  |