அகத்திணையியல்--நூற்பா எண் 183669

சனத

சனத்தை மறந்து உறக்கத்தை நீத்தன. நீ அங்குப் பாடிய பாடல்கள்
என்செவிகளைத் தூர்த்தன. இனி, நீ பரத்தையர் இருப்பிடத்திலேயே சென்று

பாடு.]

கூத்தர் வாயில் மறை:


வடிக்கண் ணியரொடும் வந்தனை நீவந் தனைசெயல்உன்
நடிக்கும் பழைய நடத்தில்ஒன் றோஇந் நடிமறவார்
அடிக்கண் அதிர்கழல் வீரிய நாமங்கொள் ஆரியஇப்
படிக்கண் நகர்முழு தும்பாடி ஆடும் பரத்தையரே.

அம்பி. 488

எனவும்,

      [வீரர்களாய் வீரக்கழல் அணிந்த வீரர்களின் பெருமையை ஒத்த
பெருமைஉடைய ஆரியக்கூத்தனே! இவ்வுலகில் நகர்முழுதும்
பாடி ஆடும் பரத்தையர் குழாத்தோடு நீ இங்குவந்து என்னை
வந்தனைசெய்வது ஆகிய இந்நடிப்பு உன்பழைய நடனங்களில்
ஒன்றுபோலும்!]


பாங்கி வாயில் மறை:
 

உடைமணி கட்டிச் சிறுதேர் உருட்டி உலாத்தரும்இந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன் நான்முகன் மால்அறியா
விடைமணி கண்டர்வண் தில்லைமென் தோகை அன்னார்கள்முன்னம்
கடைமணி வாள்நகை யாய்இன்று கண்டனர் காதலரே.

திரு. 385

எனவும்,

      [பிரமனும் திருமாலும் காணமுடியாதவராய் விடை ஏறிய

நீலகண்டரின் தில்லையை ஒத்த மகளிர் முன்னே, முத்த வெண்ணகைத்
தோழீ! மணிகட்டித் தேர்உருட்டித் தெருவில் நடக்கும் நம் புதல்வன்
பிறந்தபின்னர், இன்றே நம் தலைவன் நம் வீட்டை அணுகியுள்ளான்.]