| 
       
       பெருந்தேன் எனநெஞ்சு உகப்பிடித்து 
      ஆண்டநம் பெண்அமிர்தம் 
      வருந்தேல் அதுஅன்று இதுவோ வருவதுஒர் வஞ்சனையே 
      
      திரு. 394 
      
      
      
      எனவும், 
      
       
           
      [திருத்தமில்லாத யானும் உய்யுமாறு சிற்றம்பலத்து ஆடிய 
      சிவபெருமானுடைய
      பொதியமலையில், யான் உய்யுமாறு அருளோடு பார்த்து 
      என் நெஞ்சில்
      அமுதுவார்த்து என்னைப் பிணித்து ஆட்கொண்ட நம் 
      பெண்அமிர்தம்
      இவள் அல்லள். இவ்வுறு அவள் போல்வது ஒரு மாய 
      உருவாகும்.] 
  
      
      பாங்கி அன்பிலே கொடியை 
      என்று இணர்த்தார் 
      மார்பனை இகழ்தல்: 
  
      
      நெறியார் அலங்கல் மணிமுடி 
      யாய் என்றும் நின்னைஅன்றி 
      அறியா இவள்இங்கு அரியள்அன் றேமண்ணில் ஆரிடத்தும்  
      குறியாத அன்புடைக் கொம்புஅனை யாரைக் குறுகிஅந்தண் 
      முறியார் களப முலைமுகந்தோறும் முயல்கசென்றே. 
      
      அம்பி. 499 
      
      
      எனவும் வரும். 
       
           
      [மாலை சூடிய மணி முடியாய்! என்றும் உன்னையன்றி வேற்றவரை 
      அறியாத
      இவள் உனக்கு அரியவள்தான். உலகில் பொருள்மேல் அன்றி 
      அதனைக்
      கொடுப்பார் யாரிடத்தும் அன்பைப் பிணித்து வைக்காத 
      பரத்தையரை
      அணுகி அவர்களைத் தழுவுவதற்குச் சென்று முயல்வாயாக.] 
       
          
      அநுவாத முகத்தான், அன்பிலை கொடியை என்றலும் வரப்பெறும். 
  
      
      அன்பிலை கொடியை என்றல்: 
      
       
             
       வேம்பின் பைங்காய்என் தோழி தரினே 
             தேன்பூங் கட்டி என்றனிர் இனியே  |