9 தலைவன் மீண்டு வந்தவழித்
தலைவியும் தலைவனும் மீட்சி குறித்து
மகிழ்தல்.
ஒத்த நூற்பாக்கள்
ஓதல் பிரிவு:
‘கல்வி நலம் கூறல் பிரிவுநினைவு உரைத்தல்
கலக்கம்கண்டு உரைத்தல் காதலர் தமது
வாய்மொழி கூறல் வருவன நான்கும்
தீமையில் கல்வி தேருங் காலே.'
திருக்கோவை, மு. வீ. கற்.
4
காவல் பிரிவு:
‘பிரிவுஅறி வித்தல் பிரிவுகேட்டு இரங்கல்
வருபவை இரண்டும் வையம் காவல்.'
" 5
தூதிற் பிரிவு:
‘பிரிவு கூறல்
வருத்தம் தணித்தல்
இருபகை தணித்தற்கு ஏகல் என்ப.'
" 6
துணைவயின் பிரிவு:
‘பிரிந்தமை கூறல் பிரிவுஆற் றாமை
கார்மிசை வைத்தல் காரை நோக்கி
வருந்தி உரைத்தல் மலர்க்குழல் அரிவை
கூதிர்கண்டு கவறல் குளிர்முன் பனிக்குஅவள்
நொந்து கூறல் நோக்கிப் பின்பனிக்கு
இரங்கி உரைத்தல் இளவேனில் கண்டுஅவள்
இன்னல் எய்தல் இதுஅவர் குறித்த
பருவம் ஆம்என வரவு கூறல்
பருவம்மறைத்து உரைத்தல் மறுத்துரைத் தல்லொடு
தேர்வரவு கூறல் வினைமுற்றி நினைதல்
நிலைமைநினைந்து உரைத்தல் முகிலொடு கூறல் |