தோளாய் பிரிந்து வருநாள்
அளவும் சுரும்புஇமிர்பூந்
தாள்ஆர் மலர்க்குழ லாள்வருந் தாவகை சாற்றுகவே.
அம்பி 523
எனவும்,
[மலையில் வளரும் மூங்கில் போன்ற தோளாய்! பழி மூள வேந்தர்
இருவர்
போரில் மாளாதபடி அவர்களைச் சந்து செய்வித்தல் வேண்டி,
யான் பிரிந்துமீண்டு வரும் நாள் வரையில், சுரும்பு இமிரும்
மலர்க்குழலாளாகிய தலைவி
வருந்தாதபடி அவளை ஆற்றுவித்துக்கொண்டு
இருப்பாயாக.]
பாங்கி பிரிவு உடன்படாமை:
வேயும் கரும்பும் விரும்பிய தோள்இந்த மெல்லியலும்
யாயும் பகைகண்டு இருக்கவைத் தோஎதிர்ந்தா ரைமுனையில்
பாயும் புரவிப் படைஇரு வேந்தர் பகைத்தவரைப்
போயும் தணித்துப் பொருந்திடு மாறு வருந்துவதே.
அம்பி. 524
எனவும்,
[மூங்கிலும், கரும்பும் போன்ற தோள்களை உடைய தலைவியும்
அவள்
தாயும் ஊரவர் கூறும் பகை மொழிகளைக் கேட்குமாறு
இருக்கவைத்தோ,
பகைவர்மேல் போர்முனையில் பாயும் குதிரைப் படையை
உடைய
பகைவேந்தர் இருவரையும் நீர்போய்ப் பகை தணித்துப்
பொருந்துமாறு முயலுவது?]
தூதிற்பிரிவு தலைவிக்குப்
பாங்கி அறிவுறுத்தல்:
மிகைதணித்தற்குஅரிதாம்இருவேந்தர்வெம்போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தல்உற் றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்குஎன்னை ஆண்டுகொண்டோன்தில்லைச் சூழ்பொழில்முகைதணித் தற்குஅரி தாம்புரி தாழ்தரு
மொய்குழலே[வாய்
திரு 314
எனவும், |