698இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

தோளாய் பிரிந்து வருநாள் அளவும் சுரும்புஇமிர்பூந்
தாள்ஆர் மலர்க்குழ லாள்வருந் தாவகை சாற்றுகவே.

அம்பி 523


எனவும்,

     [மலையில் வளரும் மூங்கில் போன்ற தோளாய்! பழி மூள வேந்தர்
இருவர் போரில் மாளாதபடி அவர்களைச் சந்து செய்வித்தல் வேண்டி,
யான் பிரிந்துமீண்டு வரும் நாள் வரையில், சுரும்பு இமிரும்
மலர்க்குழலாளாகிய தலைவி வருந்தாதபடி அவளை ஆற்றுவித்துக்கொண்டு
இருப்பாயாக.]
 

பாங்கி பிரிவு உடன்படாமை:


வேயும் கரும்பும் விரும்பிய தோள்இந்த மெல்லியலும்
யாயும் பகைகண்டு இருக்கவைத் தோஎதிர்ந்தா ரைமுனையில்
பாயும் புரவிப் படைஇரு வேந்தர் பகைத்தவரைப்
போயும் தணித்துப் பொருந்திடு மாறு வருந்துவதே.

அம்பி. 524

எனவும்,

     [மூங்கிலும், கரும்பும் போன்ற தோள்களை உடைய தலைவியும்
அவள் தாயும் ஊரவர் கூறும் பகை மொழிகளைக் கேட்குமாறு
இருக்கவைத்தோ, பகைவர்மேல் போர்முனையில் பாயும் குதிரைப் படையை
உடைய பகைவேந்தர் இருவரையும் நீர்போய்ப் பகை தணித்துப்
பொருந்துமாறு முயலுவது?]
 

தூதிற்பிரிவு தலைவிக்குப் பாங்கி அறிவுறுத்தல்:
 

மிகைதணித்தற்குஅரிதாம்இருவேந்தர்வெம்போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தல்உற் றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்குஎன்னை ஆண்டுகொண்டோன்தில்லைச் சூழ்பொழில்முகைதணித் தற்குஅரி தாம்புரி தாழ்தரு மொய்குழலே[வாய்

திரு 314


எனவும்,