[கார்மேகமும் கடலும் வற்றும்
காலத்தும் உலகைக் காத்தற்கு
மேற்கொண்ட
தஞ்சைவாணனுடைய பகைவரைப் போல வெகுளும்
படையின் போர்|
தணிக்கச் சென்ற தலைவன், உலகு முழுவதும் முன்பனி
பொழிகின்ற
இக்காலத்தே, தலைவியின் துயரைப் போக்குதற்கு
வந்துதோன்றிவிட்டான்.]
துணைவயின் பிரிவு
துணைவயின் பிரிவு தலைமகனால் உணர்ந்த தோழி
அதற்கு உடன்படாமை:
கன்னல் சிலைமதன் காதும் செருவில் கலங்குகின்ற
இன்னற்கு உதவிசெய் தால்என்ன தாகும் இருஞ்செருவின்
மன்னர்க்கு உதவி செயப்பிரி யும்வரி யும்கழற்கால்
செந்நெல் பழனக் கழனிநல் லூரஎம் சேயிழைக்கே.
அம்பி. 528
எனவும்,
[போரிலே நண்பராகிய மன்னவர்க்கு உதவிசெய்யப்பிரியும்
கழற்காலினையும்,
செந்நெல் விளையும் வயல்களையும் உடைய நல் ஊர!
எம்தலைவி
கருப்புவில்லோனாகிய மன்மதன் செய்யும் போரில் கலங்கும்
துன்பத்திற்கு நீ
உதவிசெய்தால், என்ன குறைவு உனக்கு ஏற்படும்.?]
துணைவயின் பிரிவு தலைவிக்குப்
பாங்கி அறிவுறுத்தல்:
போது குலாய புனைமுடி வேந்தர்தம்
போர்முனைமேல்
மாது குலாயமென் நோக்கிசென் றார்நமர் வண்புலியூர்க்
காது குலாயகுழை எழி லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாம்விளை கின்றதுஇன்று ஒன்னார் இடுமதிலே.
திரு 316
எனவும்,
[அன்பு வெளிப்படுத்தும் மெல்லிய பார்வையுடையாய்! போர்ப்
பூச்சூடிய
முடிவேந்தர்தம் போர்முனைமேல் நம் தலைவன் |