அகத்திணையியல்--நூற்பா எண் 186703

 ‘பகைவரைப் போரிட்டு மாறுபாட்டை அழித்த நெடுந்தேரும் தலைவரும்
வெற்றியோடு மீண்டு வருதலைக்காணும் வாய்ப்பினை யாம் பெறும்அளவு
அதுகாறும் உயிரோடு இருக்கமாட்டோம்' என்ற சொற்களே அவள்
கூற்றாகும்.]
 

தலைவன் பாசறைப் புலம்பல்:
 

சாந்தம் கமழும் தடமுலை யாள்நின்ற தன்மைஇது
வேந்தன்பகைமுற்றிமீள எண்ணேன்வெயில்போய்ஒளித்துக்
காந்தும் கடுங்கன லும்பொடி போர்க்கும் கடைப்பனிநாள்
போந்தும் கிடந்துவிட் டேன்என்ன பாவம் புகல்வதுவே.

அம்பி 533

எனவரும்.

      [சந்தனம் மணக்கும் தடநகிலாள் இருக்கும்நிலை இதுவாம்.
வேந்தனுடைய பகைவர்கைsள அழித்து விரைவில் மீண்டு வருதலைக்
கருதேனாய், வெயில் ஒளிப்பக் கனலும் பொடி போர்க்கப் பின்பனிக்காலம்

வந்தும் பாசறையிலேயே தங்கிவிட்டேன். யான் செய்துள்ள தீவினையை
என்ன என்று புகல்வேன்?]
 

தலைவி பிரிந்துழிக் கனவு கண்டு இரங்கல்:
 

வனவேய் பொருதடந் தோள்வடந் தோய்முலை வல்லுப்புல்ல
நனவே எனஉன்னி நாட்டம் துறந்துநன் ஞானம்இல்லார்
எனவே தனிநின்று இரங்கவெங் கானத்து இகலும்கங்குல்
கனவே உனக்கும் கனவுஎய்து மால்ஒரு காலத்திலே.

அம்பி. 551


எனவும் வரும். இவை ஆறும் பிரிவுழிக் கலங்கற்கு உரியவாம்.

      [வேய்த்தோள் வனமுலை நல்லாளைக் கனவிடைப் புல்லினேனாக,
நனவாகக் கண்விழித்து நல்ல ஞானம் இல்லாதவர்களைப் போலக் கலங்கித்
தனியே நின்று நான் வருந்துமாறு கொடிய காட்டில் எனக்கு மாறுபாட்டைச்
செய்யும் இராக்