காலக் கனவே! உனக்கும் ஒரு
காலத்தில் கனவு வந்து உன்னைத்
துன்புறுத்தும்]
பின்பனிப் பருவம் கண்டு வருந்திய தலைவியைத்
தோழி ஆற்றுவித்தல்:
வடுக்கண்டனையகண்மங்கை நல்லாய் தஞ்சைவாணன்வெற்[பில்
அடுக்கம் குளிர அசைகின்ற வாடை அகன்றவர்க்கு
நடுக்கம்செய் பின்பனி நாளின்வந் தார் அமர் நண்பன்உற்ற
இடுக்கண் களையஅன் றேஅகன் கானம் இகந்தவரே.
தஞ்சை. 419
எனவரும்.
[வடுவகிர் போன்ற கண்களை உடைய தலைவி! போரில் ஈடுபட்ட
நண்பனுடைய துன்பத்தைப் போக்கக் காட்டைக் கடந்து சென்ற நம்
தலைவர்
தஞ்சைவாணன் மலையில் பக்கமலைகள் குளிர அசைகின்ற
வாடைக்காற்றுப்
பிரிந்தவர்களுக்கு நடுக்கம் செய்யும் பின்பனிநாளில் வந்து சேர்ந்தார்.]
‘தூதும் துணையும் ஏது வாகச்
சென்றோன் அவ்வினை நின்று நீட் டித்துழிப்
புலந்து பாசறைப் புலம்பவும் பெறுமே.'
இ. வி. பொ. 89
என்ப ஆகலின், வினை ஓர்யாண்டின் முடியாது நீட்டித்தவழி, தலைவன்
தலைமகள்உருவுவெளிப்பாடு கண்டு சொல்லியது:
மைக்குஞ் சரநிரை யால்தஞ்சை வாணன் மருவலரைக்
கைக்கும் களம்கெழு பாசறை யூடு கயலும்வில்லும்
மொய்க்கும் சுடர்இள அம்புலி தானும் முயங்கிஎல்லாத்
திக்கும் தொழவரு மேசுருள் ஓலைத் திருமுகமே.
தஞ்சை. 433
எனவரும். இது வன்பொறைக்கு
உரித்து. |