ஒத்த நூற்பாக்கள்
முழுதும்--
தொல். பொ. 504. பே
‘தலைவன் தலைவியொடு நற்றாய் கூறாள்.’
ந. அ. 218
192
நற்றாய், செவிலி கூற்று நிகழ்த்தும் திறம்
565 புணர்ந்துஉடன் போயது உணர்ந்த பின்றை
அந்தணர் தெய்வம் அயலோர் அறிஞர்
சிந்தைநோய் அறிவோர் செவிலி பாங்கியொடு
கண்டோர்க்கு உரைத்தல் பண்புடைத் தாய்க்கும்
தாயொடு பாங்கி தாம்முத லாரோடு
ஆயிடை உரைத்தல் சேயிழைச் செவிலிக்கும்
உரிய என்மனார் உணர்ந்திசி னோரே.
இது நற்றாயும் செவிலித்தாயும் கூற்று நிகழ்த்துங்கால், அக்கூற்று
அவர்க்கு இன்னாரோடு
இன்னுழி ஆம் என்பதோர் ஒழிபு கூறுகின்றது.
(இ-ள்) தலைவன் புணர்ந்து உடன்போயவாறு தான் அறிந்தபின்னர்
அந்தணர் முதலாகிய அனைவர்க்கும்
கூறுதல் நற்றாய்க்கும், அங்ஙனம்
புணர்ந்து உடன்போயவாறு தான் அறிந்தபின்னர் நற்றாய்
முதலிய
அனைவரோடும் கூறுதல் தலைமகள் செவிலித்தாய்க்கும் உரிய என்று
கூறுவர் அறிந்தோர்
என்றவாறு.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்-
ந. அ. 219,220
193
கண்டோர் கூற்று
566 தாயர் பாங்கியர் தலைவன் தலைவியோடு
ஏயும் என்ப கண்டோர் கூற்றே.
இது கண்டோர் கூற்று நிகழ்த்துங்கால் அக்கூற்று இனையரோடு
நிகழ்த்துவர் என்பதோர் ஒழிபு
கூறுகின்றது. |