764இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

நகை என்ற மெய்ப்பாடு


    எள்ளல் இகழ்ச்சி. இளமை-குழத்தன்மை. பேதைமை-அறிவின்மை,
மடம்-கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை.

    எள்ளல் முதலாக ஆக்கம் ஈறாகக் கிடந்த நானான்கும் ஒன்று
இரண்டாகி நாலெட்டு ஆதலும் உடைய. அங்ஙனம் ஆதல் மேற்காட்டும்
உதாரணங்களான் உணர்க.

1 எள்ளல்:

     ‘எள்ளி நகினும் வரூஉம்’

கலி. 61

     எனத் தன்கண் கிடந்த எள்ளலும்,


     தன்மகள் தன்னை மதியாது இகழ்ந்தாள் என்றலின்,
     ‘நல்லை மன்னென நகூஉப் பெயர்ந்தோளே’

அகநா. 248

     எனப் பிறர் எள்ளியதும்,

2 இளமை:

     ‘நடுங்குதல் காண்மார் நகைகுறித் தனரே’

கலி. 13

     எனத்தன் இளமையும்,
     ‘நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்’

 அகநா. 16

     எனப் பிறர் இளமையும்,

3 பேதைமை :

   தான் செய்த தவற்றுக்குத் தாய் தன்னை வெகுண்டது தனக்கு நகையாகக்
 கொண்டமையின்,


   ‘நகைநீ கேளாய் தோழி’

அகநா. 248

    எனத் தன் பேதைமையும்,

 

    ‘நகையாகின்றே தோழி, ... ...
    மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே’

அகநா. 56

    எனப் பிறன் பேதைமையும்,