‘நிலத்தினும் பெரிதே
வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவு இன்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சி பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே'
குறுந் 3
எனத் தன்கண் தோன்றிய
பெருமையும்,
(இது தலைமகன் கருத்தினை நட்பிற்குக் கொள்ளுங்கால்
பிறன்கண்தோன்றிய பெருமையும் ஆம்.)
15 சிறுமை:
‘மைம்மலர் ஓதி மணிநகைப் பேதைதன்
கொம்மை வரிமுலை ஏந்தினும் - அம்ம
கடையில் சிவந்த கருநெடுங்கண் பேதை
இடையில் சிறியதொன்று இல்.'
தொல். பொ. 255
உரை -எடு
எனப் பிறன்கண் தோன்றிய சிறுமையும்,
(தன்கண் தோன்றிய சிறுமை வந்துழிக் காண்க.)
16 ஆக்கம்:
நரி வெரூஉத்தலையார் தம் உடம்பு பெற்று வியந்து கூறிய
பாட்டாகலின்,
‘எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனின் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும.'
புறநா. 5
எனத் தன்கண் தோன்றிய ஆக்கமும்,
‘உறக்கும் துணையதோர் ஆலம்வித்து ஈண்டி
இறப்ப நிழல்பயந் தாஅங்கு.'
நாலடி. 38
எனப் பிறபொருட்கண் தோன்றிய ஆக்கமும், |