19 கள்வர்:
‘ஒரூஉ நீ எம்கூந்தல் கொள்ளல் யாம்நின்னை
வெரூஉதும் காணுங் கடை’
கலி. 87
இதனுள் தலைவனைக் கள்வன்பால்
சார்த்தி உரைத்தமையின் கள்வரும்,
20 இறை:
‘எருத்துமேல் நோக்குறின் வாழலேம் என்னும்
கருத்தினால் கை கூப்பிப் பழகி--எருத்திறைஞ்சிக்
கால்வண்ணம் அல்லால் கடுமான்தேர்க் கோதையை
மேல்வண்ணம் கண்டறியா வேந்து.’
தொல். பொ. 256 உரை. எடு
இதனுள் இறையும் பொருளாக அச்சம் பிறிதுபொருள் பற்றியே வந்தவாறு.
விளக்கம்
அணங்குதல்--துன்புறுத்துதல்.
நிரயபாலர் -- நரகத்தைப் பாதுகாத்து
நடத்துவோர்; அவர் தருமதேவதையின் ஏவலர் ஆகிய இயமன் முதலோர்.
சவம் தின்பெண்டிர்--இடாகினிப் பேய் முதலியன; உரும்இசை--இடியோசை.
‘யானை தாக்கினும் ... .... வாழ்க்கை’
யானை தன் எதிரே செல்லினும், பாம்பு தன்மேலே செல்லினும்
நீலநிறத்தை
உடைய மேகத்தினிடத்தே வலிய உரும் ஏறு இடிப்பினும்
கருக்கொண்ட
இளம்பெண் அவற்றிற்கு அஞ்சி மீளா மறத்தைப் பூண்ட
வாழ்க்கை-என்பது
பொருள்.
இடிஇடித்தல் அணங்கு பொருளாகவரும் அச்சத்திற்கும், யானை
தாக்குதலும்
அரவு மேற்செல்லுதலும் விலங்குபொருளாக வரும்
அச்சத்திற்கும்
எடுத்துக்காட்டு. |