அகத்திணையியல்--நூற்பா எண் 206789

26
 

 26 குடிகோள்:

நின்மகன், படை அழிந்து மாறினன் என்று பலர்கூற,

     ‘மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
     முலைஅறுத் திடுவன் யான்எனச் சினைஇ’

புற. நா. 278


இதனுள் தன்மகன் மறக்குடிக்குக் கேடு சூழ்ந்தான் என்று சினங்
கொண்டாள் ஆகலின் குடிகோளும்,

27 அலை:

     ‘வரிவயம் பொருத வயக்களிறு போல
     இன்னும் மாறாது சினனே’

 புற. நா. 100


இதனுள், புலியான் அலைக்கப்பட்ட யானை பொருது போந்தும்
அவ்வலைப்புஉண்டலை நினைந்து சினங்கொள்ளா நின்றது என்றமையின்
அலையும்,

28 கொலை:

       ‘உறுதுப்பு அஞ்சாது உடல்சினம் செருக்கிச்
       சிறுசொல் சொல்லிய சினம்கெழு வேந்தரை.’

புற. நா. 72


இதனுள், சிறுசொல் சொல்லுதல் என்பது புகழ்கொன்று உரைத்தல் ஆதலின்
கொலையும் பொருளாக வெகுளி பிறிது பொருள்பற்றி வந்தவாறு.
 

விளக்கம்
 

‘முறம் .... .... செற்று’ --

      தன் காதுப்புறமாகப் பாய்ந்து துன்புறுத்திய புலியை யானை
வெகுளியான் அழித்தது என்புழி, தன் உறுப்புக்களுக்குத் தீது செய்தல்
பொருளாக யானைக்குப் புலியிடம் வெகுளி பிறந்தது.