3 நடுவுநிலை:
ஒன்பது சுவைகளுள் ஒன்றென நாடகநிலையுள் வேண்டப்படும் சமநிலை;
அஃதாவது ‘ செஞ்சாந்து எறியினும் செத்தினும் போழினும்-நெஞ்சுஓர்ந்து
ஓடா நிலைமை' (பழமொழி. 95) அது காமம் வெகுளி மயக்கம்
நீங்கினோர்
கண்ணே நிகழ்வது. இது சிறுவரவிற்று ஆகலான்
இவற்றோடு கூறினார்.
4 அருளல்:
மக்கள் முதலிய சுற்றத்தாரை அருளுதல். அது ‘அரிதாய அறன்எய்தி
அருளியோர்க்கு அளித்தலும்’ கலி. 11. என்றாற்போல வருவது.
ஆண்டை,
(206) கருணையினை அழுகை என்றமையின், இஃது
அதனோடு அடங்காது.
5 தன்மை:
சாதித்தன்மை; அவையாவன--பார்ப்பாராயின் குந்திமிதித்துக் குறுநடை
கொண்டு வந்து தோன்றலும், அரசராயின் எடுத்த கழுத்தோடும் அடுத்த
மார்போடும் நடந்து சேறலும், இடையராயின் கோல்கையும் கொடுமடி
உடையும் விளித்த வீளையும் வெண்பல்லுமாகித் தோன்றுதலும் என்று
இன்னோரன்ன வழக்கு நோக்கிக் கொள்க.
6 அடக்கம்:
உயர்ந்தோர் முன் அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அவை பணிந்த
மொழியும்
தணிந்த நடையும் தானை மடக்கலும் வாய்புதைத்தலும்
முதலாயின.
101 |