12 வாழ்த்தல்:
பிறரால் வாழ்த்தப்படுதல். வாழ்த்தல் பிறன்வினை அன்றோ எனின்,
ஒருவனை ‘ நீடு வாழ்க ‘ என்று வாழ்த்தல் பிறன்வினை ஆயினும்,
அதனால் வாழ்விக்கப்படுதலின் அவ்வாறு கூறல் அமையும் என்பது.
13 நாணுதல்:
நாண் உள்ளம் பிறருக்கு வெளிப்பட நிகழும் நிகழ்ச்சி.
14 துஞ்சல்:
உறக்கம். அது நடந்து வருகின்றான்கண்ணும் விளங்கித் தோன்றலின்
அதுவும் மெய்ப்பாடு எனப்பட்டது.
15 அரற்றல்:
அழுகை அன்றிப்பலவும் சொல்லித் தன்குறை கூறுதல். அது காடு
கெழு செல்விக்குப் பேய் கூறும் அல்லல் போல, வழக்கினுள்ளார்
கூறுவன.
16 கனவு:
வாய் வெருவுதல்; அதனானும் அவன் உள்ளத்து நிகழ்கின்றது ஒன்று
உண்டு
என்பது அறியப்படும்.
17 முனிதல்:
வெறுத்தல்; அஃது அருளும் சினமும் இன்றி இடை நிகர்த்தாதல்.
‘வாழ்க்கை
முனிந்தான்’ எனவும்,
‘உறையுள் முனியும்அவன் செல்லும் ஊரே.’
புறநா. 96
எனவும் சொல்லுப ஆகலின்.
18 நினைதல்:
விருப்புற்று நினைதல்; நின்னை மிகவும் நினைத்தேன் என்பது
வழக்காதலின்.
அந்நினைவுள்ளம் பிறருக்குப் புலனாதலின்
மெய்ப்பாடாயிற்று. |