19 வெரூஉதல்:
விலங்கும் புள்ளும்போல வெருவிநிகழும் உள்ள நிகழ்ச்சி. அஃது
அஞ்ச
வேண்டாதன கண்ட வழியும் கடிதின் பிறந்து மாறுவது
ஒருவெறி.
20 மடிமை: --சோம்பு.
21 கருதல்: --மறந்ததனை நினைத்தல்.
22 ஆராய்ச்சி:
ஒரு பொருளை நன்று தீது என்று ஆராய்தல்.
23 விரைவு:
இயற்கைவகையான் அன்றி ஒரு பொருட்கண் விரைவு தொழில்பட
உள்ளம்
நிகழும் கருத்து.
24 உயிர்ப்பு:
வேண்டிய பொருளைப் பெறாதவழிக் கையறவு எய்திய கருத்து. அது
நெட்டுயிர்ப்புக்கு முதலாகலின், அதனையும் உயிர்ப்பு என்றார் என்பது.
25 கையாறு:
அவ்வுயிர்ப்பும் இன்றி வினை ஒழிந்து அயர்தல்.
26 இடுக்கண்:
மலர்ந்த நோக்கம் இன்றி, மையல் நோக்கம் படவரும் இரக்கம்.
27 பொச்சாப்பு:
அற்றப்படுதல்; அஃதாவது பாதுகாத்துச் செல்கின்ற பொருட்கண்
யாதானும்
ஓர் இகழ்ச்சியான் இடையறவுபடுதல்.
28 பொறாமை:
அழுக்காறு; அஃதாவது பிறர் செல்வம் கண்டவழி வேண்டாதிருத்தல். |