செல்வத்தால் தான் நுகரலாம்
அளவே நுகர்ந்து, மிகுதியான செல்வம்
இருக்கிறது என்ற உள்ள நிலையே ‘நதிமேல் நின்ற மரம் போல' என்பதன்
விளக்கமாம்.
‘செஞ்சாந்து .... .... நிலை’ --
சந்தனம் பூசியதனால் மகிழ்ச்சியும் வெட்டிச் செதுக்கியதனால்
துன்பமும்
கொள்ளாது எப்பொழுதும் ஒரே பெற்றியராய் இருக்கும் நிலை.
அருளியோர் -- நம்மால் அருள்செய்யத் தக்கார்.
தன்மை- குந்தி மிதித்து - நெடுந்தொலைவு செல்லுங்கால்
இடையிடைத்
தங்கி மெல்லநடந்து; அழுந்த மிதியாது மெல்ல மிதித்து
என்பதும் ஆம்.
கோற்கை- நிரைகளை ஒட்டுதற்குரிய கோலை வைத்திருக்கும் கை.
கொடுமடி- இலை முதலியன இடுதற்கு விடும் வளைந்த மடி.
வீளை- நிரைகளை அழைப்பதற்கு ஒலிக்கும் சீழ்க்கை.
வெண்பல்- தம்பலம் சுவைக்காத பற்கள்.
தானை மடக்கல்--ஆடையை அலைய விடாது மடக்கிக் கொள்ளுதல்.
காடுகெழு செல்விக்குப் பேய் கூறுவன பரணிநூல்களில்
‘பேய் முறைப்பாடு' என்ற பகுதியான் அறியலாம்.
‘உறையுள் .... .... ஊரே' --
அதியமான் படையெடுத்துச் செல்லும் ஊர்களில் தங்கி இருத்தலை
ஊர்மக்கள் வெறுப்பர்.
உயிர்ப்பு -- செயலற்று மூச்சுவிடுதல்.
மலர்ந்த நோக்கம் -- தெளிந்த பார்வை. |