816இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

  போலாது ஊறுஉணர்வு உடைய உறுப்பு ஆகலின், காதின்
  வேறுபாட்டினைக் கூழை வேறுபாட்டின் பின் வைத்தார்; என்னை ?
  கூழையின் காது தனக்கு உறவு உடைமையின்.

7  ஊழ்அணிதைவரல் :


   அக் கூழையும் தோடும் போலாது பெய்யப்படும் முறைமைய ஆகிய
   வளைகளை முன்கைமேல் இறுகச் செறித்தலும். விரல் செறியினைத்
   திருத்தலும் முதலாயின. இவைதோடு போலச் செறிவு இல்லன   
   அன்மையின், அவற்றுப் பின் வைத்தார்.

8  உடைபெயர்த்து உடுத்தல்:


   உடுத்த உடையினைப் பலகாலும் அழித்து உடுத்தல். அது கழல்தொடி
   போலாது செறிவு உடைமையின் அவ்வுடை நெகிழ்ச்சியைத் தொடி
   நெகிழ்ச்சிக்குப் பின் வைத்தார். மற்று,

      ‘தொடி நெகிழ்ந் தனவே தோள்சா யினவே’

குறுந். 239

    எனப் பிரிவின்கண் வந்த வேறுபாட்டினை ஈண்டுக்கூறார்; அவை,

     ‘வினைஉயிர் மெலிவிடத்து இன்மையும் உரித்தே’

தொல். பொ. 268

    என்ப ஆகலின், உயிர் மெலிவிடத்து இடையறவுபட நிகழ்ந்தன
    ஆகலான் என்பது.

இவற்றிற்குச் செய்யுள்:

      ‘விண்உயர் விறல்வரைக் கவாஅன் ஒருவன்
      கண்ணின் நோக்கியது அல்லது தண்ணென