அகத்திணையியல்--நூற்பா எண் 208821

 

     ‘இம்மை உலகத்து அன்றியும் கேள் அறிந்தன’ என்பது இருவர்
அன்பும் எழுமையும் தொடர்ந்த அன்பு என்று கூறியவாறு.
 

ஓத்த நூற்பா
 

     ‘அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்
      இல்வலி உறுத்தல் இருகையும் எடுத்தலொடு
      சொல்லிய நான்கே மூன்றுஎன மொழிப.’

தொல். பொ. 263]


13  பாராட்டு எடுத்தல்:


   அங்ஙனம் பன்னிருவகை மெய்ப்பாடும் நிகழ்ந்தவழிப்புணர்ச்சி நிகழும்
   அன்றே. அதன்பின்னர்த் தலைமகனை இயற்பட நினையும் குறிப்பு.  
   பாராட்டு என்னாது ‘எடுத்தல்’ என்றதனால், இதனை உள்ளம் எடுத்தல் 

   மேற்கொள்க.

14  மடம்தப உரைத்தல்:


    விளையாடும் பருவத்து நிகழ்ந்த அறிமடம் நீங்கிக்  
    காமப்பொருட்கண்ணே சிறிது அறிவு தோன்றப் பாங்கிக்குச் சில

    கூற்றுமொழி கூறல்; மடந்தப உரைத்தற்கு ஏதுவாகிய கருத்து ஈண்டு

    மெய்ப்பாடு எனப்படும்.

15  ஈரம் இல்கூற்றம் ஏற்று அலர் நாணல்:


   அங்ஙனம் அறிமடம் கெடச் சொல் பிறந்தவழி இன்றளவும் தமரால்
   கூறப்படாத கடுஞ்சொல் உளவாம் அன்றே ! அவற்றை முனியாது
   ஏற்றுக்கொண்டு,‘புறத்தார்க்கு இது புலனாங்கொல்?’ என்று நாணுதல்.

16 கொடுப்பவை கோடல்:


   தலைமகனால் கொடுக்கப்பட்ட தழையும் கோதையும் தாரும் கண்ணியும்
   தோள்மாலையும் முதலாயின கொண்டு கையுறை பாராட்டுதல்.

   இவை நான்காம் அவத்தைக்கண் நிகழ்வன.