824இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

19 கரந
 

19  கரந்திடத்து ஒழிதல்:


   அக்காலத்து இற்செறிக்கப்படுதலான் தான் அவனை மறுத்த ஏதத்திற்கு
   நாணியும், அஞ்சியும் அவற்கு வெளிப்படாது ஒழுகுதல். தன் இடத்தே
   தங்குதலை ‘இடத்து ஒழிதல்’என்றார்.

20  கண்டவழி உவத்தல் :


   அங்ஙனம் கரந்து ஒழுகும் காலத்து அவனை ஒரு ஞான்று கண்டவழிக்
   கழிஉவகை மீதூர்தல்.

   இவை நான்கும் ஐந்தாம் அவத்தைக்கண் நிகழ்வன.

   இவற்றிற்குச் செய்யுள்:

   ‘அறியாய் கொல்லோ நீயேதெறுவர
   நோக்குதொறும் பனிக்கும் நெஞ்சமொடு இவளே
   யாய்க்குஅறி வுறாஅலின் நின்எதிர் நாணி
   மனைவயின் பிரியலள் மன்னே அதற்கே
   நினைவிலள் இவள்என உரைத்தி
   புனைதார் மார்ப காண்டியோ அதுவே.’


எனவரும.
 

விளக்கம்


    பட்டாங்கு - நிகழ்ந்தவாறு.

‘அறியாய் கொல்லோ’

     பகற்குறிக்கண் தலைமகளை இடத்து உய்த்துவந்து, தலைமகனை
எதிர்ப்பட்டு நின்று தோழி வரைவுகடாய பாடல் இது.

    ‘தலைவனே! நீ அறியாயோ! அஞ்சுதல் தோன்றத்தாய்
பார்க்குந்தொறும் நடுங்கும் மனத்தோடு, தலைவி தாய்க்கு அறத்தொடு
நின்றமையின், நின் எதிர் வருதற்கு