826இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

22 புலம
 

22  புலம்பித் தோன்றல்:


   அங்ஙனம் புனைந்த கோலம் துணையொடு கழியப் பெறாமையின் 
   புல்லென்று அழிந்த நெஞ்சினள் ஆகலான், எல்லாச் சுற்றத்தார்க்கும்
   இடைநின்றேயும், தனியள் என்று அறிவியாநிற்றல்.

23  கலங்கி மொழிதல்:


    கையொடுபட்ட கள்வரைப் போலச் சொல்லுவனவற்றைத் தடுமாற்றம்
    தோன்றச் சொல்லுதல். அஃதாவது தன் மனத்து நிகழாநின்றன தன்னை
    அறியாமல் சில புலப்படச் சொல்லுதல் ஆயிற்று.

24 கையறவு உரைத்தல்:


   கலங்காது சொல்லுங்கால் செயலறவு தோன்றச் சொல்லுதல்; அஃதாவது
   வன்புறை எதிரழிந்து சொல்லுவன போல்வன.

   இவை நான்கும் ஆறாம் அவத்தைக்கண் நிகழ்வன.

   புறஞ்செயச் சிதைதல் முதலிய நான்கற்குச் செய்யுள்:

‘இவளே, அணியினும் பூசினும்பிணிஉழந்து அசைஇப்


    பல்கிளை நாப்பண் இல்கிளை போல
    மொழிவகை அறியாள் பொழிகண் நீர்துடைத்து
    யானே கையற அலமரும்
    கூறாய் பெரும நிற்றேறு மாறே.’


எனவரும்.

விளக்கம்
 

     தனியள் என்று அறிவியாநிற்றல - தான் தலைவன் தொடர்பு அன்றித் தோழி முதலிய பிறர் தொடர்பை வெறுத்தமையின், தனித்திருப்பாளாக நெஞ்சத்துக் கருதுதல்.