888இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

அவளும
 

அவளும் தமரும் தீங்கு செய்தாராக அவளோடு தீங்கைப் புணர்த்தும், தான்
ஏதம் செய்யாது தீங்கு பட்டானாகத் தன்னோடு நன்மையைப் புணர்த்தும்
என நிரல்நிறையாக உரைக்க. இரு திறத்தால் தருக்கிய எனக் கூட்டுக.

எடுத்துக்காட்டு:

     வாருறு வணர்ஐம்பால் வணங்குஇறை நெடுமென்தோள்
     பேர்எழில் மலர் உண்கண் பிணைஎழில் மான்நோக்கின்
     கார்எதிர் தளிர்மேனிக் கவின்பெறு சுடர்நுதல்
     கூர்எயிற்று முகைவெண்பல் கொடிபுரை நுசுப்பினாய்!
     நேர்சிலம்பு அரிஆர்ப்ப நிரைதொடிக்கை வீசினை
     ஆருயிர்வௌவிக்கொண்டு அறிந்துஈயாது இரப்பாய்கேள்;

                                                  (இது தரவு)
     உளனாஎன் உயிரைஉண்டு உயவுநோய் கைம்மிக
     இளமையான் உணராதாய் நின்தவறு இல்லானும்
     களைநர்இல் நோய்செய்யும் கவின்அறிந்து அணிந்துதம்
     வளமையால் போத்தந்த நுமர்தவறு இல்என்பாய்;

     நடைமெலிந்து அயர்வுறீஇ நாளும்என் னலியும்நோய்
     மடமையான் உணராதாய் நின்தவறு இல்லானும்
     இடைநில்லாது எய்க்கும்நின் உருஅறிந்து அணிந்துதம்
     உடைமையால் போத்தந்த நுமர்தவறு இல்என்பாய்;


     அல்லல்கூர்ந்து அழிவுற அணங்காகி அடரும்நோய்
     சொல்லினும் அறியாதாய் நின்தவறு இல்லானும்
     ஒல்லையே உயிர்வௌவும் உருஅறிந்து அணிந்துதம்
     செல்வத்தால் போத்தந்த நுமர்தவறு இல்என்பாய்;

                                     (இவை மூன்றும் தாழிசை)
                 என ஆங்கு (தனிச்சொல்)

ஒறுப்பின்யான் ஒறுப்பது நுமரையான் மற்றிந்நோய்
பொறுக்கலாம்வரைத்தன்றிப்பெரிதாயின், பொலங்குழாய்!