இங்ஙனம் உள்ளக் கருத்தை
மறைத்து முதலில் கூறி்ப்பின் உடன்படுதல்
பற்றி,
‘வேட்கை மறுத்துக் கிளந்தாங்கு உரைத்தல்
மரீஇய மருங்கின் உரித்துஎன மொழிப.’
தொல். பொ. 211
என்றார் தொல்காப்பியனார்.
ஒத்த நூற்பா
முழுதும்--
தொல். பொ. 51
219
பாடப் படுவோர் இருவர்
582 பாட்டுடைத் தலைவன் கிளவித் தலைவன்எனப்
பாட்டினுள் பாடப் படுவோர் இருவர்.
இஃது அகப்பாட்டிற்கு உரியதோர் ஒழிபு கூறுகின்றது.
(இ-ள்) பாட்டிற்கு உரிமை பூண்ட தலைவனும், கிளவிக்கு
உரிமைபூண்ட தலைவனும் என அகப்பொருள்
பற்றிவரும் பாட்டினுள்
பாடப்படுவோர் இருவர் என்றவாறு.
220
விளக்கம்
பாட்டுடைத் தலைவன்--புலவனைப் ஆதரித்துப் பாட்டு இயற்றச்செய்த
தஞ்சைவாணன்
போல்வான்.
கிளவித் தலைவன் -- இயற்பெயர் சுட்டப்படாது அகத்திணைக் கண்
வழங்கும் வெற்பன்,
காளை, நாடன், ஊரன் சேர்ப்பன் முதலிய பெயர்களால்
குறிக்கப்படுபவன்.
ஒத்த நூற்பா
முழுதும்-- ந.அ. 245
220 |