908இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

     (இ-ள்) மேல் சொல்லப்பட்ட தலைமக்கள் இருவரும் கூடவருதலும்,
அவருள் ஒருவரே வருதலும், அவ்விருவரும் வாராது ஒழிதலும் உரிய
என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.                           

224

 

விளக்கம்


     இதற்கு நம்பியகப்பொருளுரையுள் எடுத்துக்காட்டும்
உள.எடுத்துக்காட்டுக்கள் பல முன்னர் வந்துள்ளமையின் ஈண்டுக்
கூறப்படவில்லை.
 

ஒத்த நூற்பா
 

       முழுதும்--                                   

ந. அ. 249

224


அகப்புறப்பாட்டின் இயல்



597   அகப்புறப் பாட்டும் இகப்பில அவையே.

     இஃது எதிரது போற்றி இங்ஙனம் கூறிய இலக்கணம் புறப்பொருட்கும்
எய்துவிக்கின்றது, இதன்வழிக் கூறப்படுவது புறத்திணையியல் ஆகலின்.

     (இ-ள்) அகப்பாட்டிற்குச் சொன்ன இலக்கணங்களைக் கடவாது
அகப்புறப்பாட்டும் என்றவாறு.

     பொருந்துவ பொருந்தும் என்பார் ‘இகப்பில அவை’ என்றார்;
என்னை? அனைத்தும் வரல் வேண்டும் என்னும் யாப்புறவு இன்மையின்.

                                                          225

விளக்கம்:
 

     நெடுநல்வாடை என்ற பத்துப்பாட்டில் ஒன்றாகும் பாடல் தலைவனைப்
பிரிந்த தலைவி நிலைப்பற்றிக் கூறுவதால் அகமாகுமேனும், ‘வேம்புதலை
யாத்த நோன்காழ் எஃக