என வரும்.
[உபமானம் உபமேயம் உவமைஉருபு பொதுத்தன்மை என்ற நான்கனுள்
இறுதிக்கண் உள்ள இரண்டனுள் ஒன்றோ இரண்டுமோ மறைய வருவது தொகை
உவமை. தாமைரமுகம், முத்த நகை, வேய்த்தோள் இவற்றை உடைய நங்கையீர் ! நும்
குழலின்நறுமணமாகிய பாரம் தாங்காமல் தென்றல் விரைய உலாவுதல் இயலாது
நொந்ததோ - என்று பாங்கிமதி உடம்பாட்டில் இருவரும் உள்வழித் தலைவன்
வினவிய இப்பாடலில்,
உபமானம் உபமேயம் உவமைஉருபு பொதுத்தன்மை
தாமரை முகம் போல் -
தரளம் முறுவல் போல் -
வேய் தோள் புரை -
எனப் பொதுத்தன்மை மறைந்திருப்பது காண்க.
உவமஉருபு தொகுதலையும் சொல்லிலக்கணம் நோக்கித் தொகைஉவமை என்றே
மாறனலங்காரம் குறிப்பிடும்.