என வரும்.
[முன்னர் ஒரு பொருளை ஒரு தொடரால் குறிப்பிட்டு இடையே உவமை உருபு
புணர்த்துப் பின்னர் ஒப்பான மற்றொரு பொருளை ஒரு தொடரால் குறிப்பிடுவது
மறுபொருளுவமை.
அன்னைபோல் உயிர்களைக் காக்கும் அநபாயனுக்கு நிகரான உலக மன்னர்
பிறர் இல்லை. அவ்வாறே உலகில் இருள்கடிதற்குச் சூரியனைப் போன்ற கூடர் பிறிது
இன்று - என முதல்தொடரில் குறிப்பிடப்பட்ட பொருளுக்கு ஒப்புமையான பொருள்
அடுத்த தொடரில் அமைக்கப்பட்டவாறு.