என வரும்.
[நன்கு ஆராய்ந்து கொள்ளும் உபமானத்தைக் குறைபாடு உடையதாகக் கூறுவது
நிந்தை உவமை ஆகும். சிவபெருமான் அருள் போன்ற அழகிய உடல் வனப்பை
உடையளாய் முல்லை மாலை சூடிய தலைவியின் முகம், களங்கமுடைய சந்திரனையும்
அச்சந்திரனுக்குத் தோற்கும் தாமரையையும் ஒக்கும் என்றாலும் குறைபாடு ஏதும்
இன்மையால் அவற்றினும் சிறப்புடைத்து - என்ற இப்பாடலில், உபமானமாகிய மதி -
மறுப்பயின்ற வாள் மதியம் எனவும், தாமரை - மதிக்குத் தோற்கும் நிறத்து அலர்
எனவும் குறைகூறப்பட்டவாறு காண்க.
இது பழிப்புவமை எனவும் பெயர் பெறும்.