114

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [ஒரு பொருளுக்கு ஒன்றனை உபமானமாகக் கூறி அதனோடு அமையாது,
 அதுபோன்ற பிற பொருள்கள் உளவேல் அவையும் உபமானமாகும் என்று கூறுவது
 அநியம உவமையாம்.

     அலைசூழ்ந்த காவிரி பாயும் சோழநாட்டில் உள்ள முல்லை மணம் கமழும்
 கூந்தலை உடைய நங்கையே! அழகிதாய்த் தேன் நிறைந்த முள்முருங்கைப்பூவே நின்
 வாய் நிறத்திற்கு ஒப்பவாது; அதுபோன்ற பொருள் பிறஉளவேனும் உவமை கூறலாம் -
 என்ற இப்பாடலில், முள்முருங்கையன்றிப் பிறவும் ஒப்பாகலாம் என உவமையை
 வரையறுக்காது கூறுவது அநியம உவமையாம்.

    "உரிய உவமை ஒண்பொருட்கு இதுகீழ்க்குப்
     பொருவேறு எனின்ஆம் அநியம உவமை".              - வீர. உரை 156 

    "நியமித்த உவமையை நீக்கிப் பிறிதொரு
     பொருளொடு புணர்ப்பது அநியமம் ஆகும்".            - மு. வீ. பெ. 12] 

ஐயநிலையுவமை

     எய்திய உவமையும் இயைந்திடு பொருளும் ஐயுற விளம்பும் ஐயநிலை உவமை
 வருமாறு :

    "தாதுஅளவி வண்டு தடுமாறும் தாமரைகொல்
     மாதர் விழிஉலவும் வாள்முகம்கொல் - யாதுஎன்று
     இருபால் கவர்வுஉற்று இடைஊசல் ஆடி
     ஒருபால் படாதுஎன் உளம்"

 எனவரும். இதனைத்தடுமாறு உவமை என்றும் கூறுப.

     [மாறன் அலங்கார ஆசிரியர் இதர விதர உவமையைத் தடுமாறு உவமை என்று
 குறிப்பிட்டுள்ளார். உபமானம் எது உபமேயம் எது என்று வரையறுக்க இயலாது
 மனம் ஐயத்தின்-பாற்படுவதனை உரைப்பது ஐயநிலை உவமையாம்.

     மகரந்தத்தை அளாவி வண்டு தடுமாறிச் சுழன்று கொண்டிருக்கும் தாமரையா?
 விரும்பத்தக்க விழிகள் உலவிக்கொண்டு